Saturday, November 19, 2011

இரவு வருவது பகலிற்காக
இடி மின்னல் வருவது மழைக்காக
பிரிவு  வருவது உறவிற்காக
இருள் வருவது ஒளிக்காக
துன்பம் வருவது இன்பத்திற்காக
புயல் வருவது அமைதிக்காக
அஸ்தமனம் வருவது உதயத்திற்காக
அழிவு வருவது ஆக்கத்திற்காக
ஆனால்.....
காதல் வருவது எதற்காக?
பள்ளங்களையா எம் மனங்கள்
சாக்கடையை தேக்கிகொள்ளும்
வள்ளங்கள் வந்து போக
கரை நின்று பார்ப்பது போல
உள்ளங்கள் பாறையாகிவிட
எண்ணங்கள் வந்து போகும்
குள்ளங்கள் நிலவிலுண்டு
எம் நெஞ்சங்களில் நிறைய உண்டு...


Wednesday, March 16, 2011

மானிடனே மணித்துளிகளின் 
மகத்துவம் புரிந்துகொள்...
எதையும் நாளைக்கு என்று 
தள்ளிவைக்காதே ...
காலங்கள் என்றும் 
உனக்காக காத்திருபதில்லை 
இன்றைக்கு நினைப்பதை 
இன்றைக்கே முடித்துகொள்..
நாளை என்பது 
நம்கையில் இல்லை.

Friday, February 11, 2011

10.02.2011

சில வேளைகளில்
சில மனங்களின் ஆசைகள்
இதயங்களின் வேண்டுதல்கள்
மற்றவர்களிற்கு புரியாமல்
நிராகரிக்கப்படுகின்றன....

Monday, January 24, 2011

Entry

இதய கருவிலுருந்து
ஜனனித்த கவிதைக் குழந்தைகள்
இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி
எட்டி அடிவைக்க எத்தனிகின்றன........