அம்மா
உதிரத்தை பாலாக்கி ஊட்டி
ஊணுறக்கம் மறந்து காப்பாள்
பிரதிபலன் பாராமல்
பிறவி தந்து ஆளாக்கினாள்
தன் மகவு கண்வளர
தன்னுறக்கம் தாரைவார்ப்பாள்
உன் கண்ணில் நீர் கண்டால்
உசிரையே விட்டிடுவாள்
அகரம் நீ கற்கும் வேளை
ஆசானாய் முன்னிருப்பாள்
பள்ளியில் நீ படிக்கும் போது
புத்தகப்பை தான் சுமப்பாள்
பரீட்சை உனக்கு என்றால்
அலாரமாய் அவளிருப்பாள்
கோபத்தில் நீ திட்டும் போதும்
குழந்தை என பொறுத்திடுவாள்
நீ யாருக்காக வாழ்ந்தாலும்
அவள் உனக்காகவே வாழ்ந்திடுவாள்
அன்பென்றால் என்னவென கேட்டால்
அன்னையை காட்டுவாயா நீ....?