கனவுகள்....

உன் ஏறுதலுக்கான கனவு இலக்குகள்
பனை மரங்களின் உச்சத்தில் இருக்கட்டும்
அப்போதுதான் உன் நிஜப் பயணங்களின் அடைவுகள்
வடலிகள் வரையாவது தொடரும்
உனது இயலுமைகளின் குறைமதிப்பால்
உன் கனவுகளை வடலிகளாய் வரையறுத்தால்
உனது நிஜ அடைவுகளின் இறுதியில்
தரையிலேயே நின்றுகொண்டிருப்பாய் ........
No comments:
Post a Comment