Wednesday, May 15, 2013

 
மாற்றம் 

பருவகாலத்து மாற்றங்கள் போல் உன் பார்வை தந்த
மாற்றங்கள் எத்தனை ....

பட்டாம் பூச்சியை
ரசிக்கதெரியாதவன்
வெட்டுக்கிளியைக்கண்டு
லயித்துப் போகின்றேன்.......

வருடிச்செல்லும் தென்றலைக்கூட
திரும்பியும் பார்க்காதவன் 
சூரக்காற்றுக்குள்ளும்
சுரங்கள் பிடிக்கிறேன்......

மலர்களின் வாசனையை
முகர்ந்தேயறியாதவன்
மண்புழுதி வாசனையை
நுரை ஈரலுக்குள் நிரப்புகிறேன்......

சங்கீதம் என்றாலே
சலித்துக்கொள்பவன்
சருகுகளின் சலசலப்பில்
சுருதிகளை சேமிக்கின்றேன்......

பௌர்ணமி நிலவை
மறந்தும்கூட பார்க்காதவன்
அமாவாசை இரவுகளின்
நிசப்தத்தில் மூர்சையாகிறேன்......

வானிலை மாற்றத்திற்கும்
காலநிலை மாற்றத்திற்கும்
கதிரவனே காரணமாம்
என்னுடைய மாற்றத்திற்கு
காரணம் யாரென்று
உனக்கு புரிகிறதா...?







No comments:

Post a Comment